Tuesday, December 3, 2019

03.12.2019 உலக மாற்றுத்திறனாளிகள் தினம் அதனை முன்னிட்டும்

உலக மாற்றுத்திறனாளிகள் தினம் அதனை முன்னிட்டும்,
பெல் நரசிங்கபுரம் அரசினர் நடுநிலைப்பள்ளியில் பயின்று கொண்டிருக்கும் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் அவர்களை சிறப்பு செய்யும் விதமாக அவர்களுக்கு எல்லா மாணவ-மாணவிகளும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் தற்காப்புக் பயிற்சியான கராத்தே பயிற்சி  அவர்களுக்கும் நமது பவர் சிட்டியின் சார்பாக அளிக்கப்பட்டது.

அந்தப்  பயிற்சியினை கராத்தே பயிற்சியாளரும் நமது புதிய உறுப்பினருமான ஜேசி பிரபு அவர்கள் மூலம் கொடுக்கப்பட்டது.

பயிற்சியின் முடிவில் மூன்று பேருக்கும்  பரிசுகளும் வழங்கப்பட்டன.

அப்பள்ளியின் தலைமையாசிரியர் முன்னிலையில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வின் திட்ட இயக்குநராகவும், பயிற்சியாளராகவும் சிறப்பு செய்த ஜேசி பிரபு அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.