Saturday, November 30, 2019

30.11.2019 விதைப்பந்துகள் வழங்கப்பட்டன


ராணிப்பேட்டை கங்காதரா மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு நமது பவர் சிட்டியின் சார்பாக விதைப்பந்துகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாணவ மாணவியருக்கு பயிற்சி வகுப்புகளும் அளிக்கப்பட்டன.
நமது முன்னாள் தலைவர் ஜேசிரமேஷ் பாபு அவர்கள் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி வகுப்புகளை சிறப்பித்தனர்
விதைப்பந்து மகிமை, அவற்றின் அவசியம் அவற்றைப் பயன்படுத்தும் விதம், அதனால் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்கள், இயற்கை வளங்களை பாதுகாக்கும் முறைகள் இவை அனைத்தும் மாணவர்களுக்கு குறிப்பாக கொடுக்கப்பட்டது...

Tuesday, November 26, 2019

26.11.2019 காயகல்ப யோகா பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது


இன்று ராணிப்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவ மாணவிகளுக்கு யோகக் கல்வியில் சிறப்புப் பயிற்சியான காயகல்ப யோகா பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

இதில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பயிற்சி  பெற்றனர்.

காயகல்ப யோகப் பயிற்சியை துணைப்பேராசிரியர் (பயிற்சி) மனவளக்கலை யோகா பயிற்றுநர் மற்றும் நமது ஜேசி இன் மண்டல பயிற்சியாளரும் ஆன ஜேசி திருக்குமரன் அவர்கள் பயிற்சி வகுப்பினை சிறப்பாக நடத்திக் கொடுத்தார்.

பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வினை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரும், நமது செயலாளர் 2020 ஜேசி தண்டபாணி அவர்களும் துவங்கி வைத்தனர்.

இப்பயிற்சி வகுப்புக்கான திட்ட இயக்குனராக புதிய உறுப்பினர் ஜே சி உதயகுமார் அவர்கள் பொறுப்பேற்று திட்ட நிகழ்வினை திறம்பட செய்து முடித்தார்.

இக் காயகல்ப்ப யோகப் பயிற்சியினை சிறப்பாக நடத்திக் கொடுத்த ஜேசி திருக்குமரன் அவர்களுக்கு நமது கிளை இயக்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

Saturday, November 23, 2019

23.11.2019 விதைப்பந்துகள் வழங்கப்பட்டன.



நமது பெல் ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியின் முதல்வருக்கும் ஆசிரியர்களுக்கும் மாணவ மாணவியருக்கும் இயற்கை வளங்களை பாதுகாக்கும் வகையில் உள்ள விதைப்பந்துகள் வழங்கப்பட்டன.

மேலும் மரங்களின் பயன்கள் அவற்றைப் பாதுகாக்கும் முறைகள் விதைப்பந்துகள் அவசியத்தை உணர்த்தும் வகையில் மாணவர்களுக்கு குறிப்புகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வை வழிநடத்திச் சென்ற முன்னாள் தலைவர் ஜேசிபாஸ்கரன் அவர்களுக்கும் தலைவர் மற்றும் செயலாளர் அவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

23.11.2019 சாசன தலைவர் MJF விருது வாங்கியுள்ளார்


நமது ராணிப்பேட்டை பவர் சிட்டியின் சாசன தலைவர் PMK அவர்கள் இன்று அரிமா சங்கத்தில் (lions club)  MJF  விருது வாங்கியுள்ளார்.
அவர்களுக்கு நமது கிளை இயக்கத்தின் சார்பாக கோடான கோடி நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Friday, November 22, 2019

22.11.2019 குருதிக்கொடை வழங்கினர்.


சமூக சேவை, மனிதநேயம் இவற்றில் முன் உதாரணமாக இருப்பதில் நம் கிளை இயக்கம் பெரும் பங்கு வகிக்கிறது. அதனடிப்படையில் இன்று சென்னையில் அடையாறு மருத்துவமனையில் ஒரு அன்பருக்கு அவசர மருத்துவ சிகிச்சை பிரிவில் ரத்தம் தேவைப்பட்டது.
அவருக்கு பயனளிக்கும் விதத்தில் நமது கிளை இயக்கத்தின் சார்பாக முன்னாள் தலைவர் ஜேசி வினோத் குமார் அவர்களும், உடனடி முன்னாள் தலைவர் ஜேசி ஏழுமலை அவர்களும் குருதிக்கொடை வழங்கினர்.
அவர்களின் நற்செயல்களை வாழ்த்தி வரவேற்கிறோம்.

நமது கிளை இயக்கத்தின் சார்பாக அவர்களுக்கு கோடான கோடி நன்றிகளை சமர்ப்பிக்கிறோம்

Tuesday, November 19, 2019

19.11.2019 இன்று உலக ஆண்கள் தினத்தை முன்னிட்டும்



நமது ராணிப்பேட்டை பவர் சிட்டியின் கிளை இயக்கத்தின் சார்பாக 2020 ஜே சி யில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டு சமூகத்திற்கான சிறந்த பணிகளில் ஒன்றான மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வை இன்று நான்கு பள்ளிகளில்  விதைப்பந்துகள் அளித்து இந்த வருடம் பயிற்சி வகுப்புகளில் பங்குபெறும் அந்தப் பள்ளிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இதில் லாலாப்பேட்டை அரசினர் பள்ளி

லாலாபேட்டை கலைமகள் மழலையர் பள்ளி

நரசிங்கபுரம் அரசினர் பள்ளி
ஆகிய பள்ளிகளில் புதிய உறுப்பினர்கள் பங்கு பெற்று நிகழ்வுகளை திறம்பட செய்தார்கள்.

மேலும் மரத்தைப் பற்றி,
மரம் வளர்ப்பதின் நன்மைகளைப் பற்றி,
மரம் வளர்வதால் நாம் சமுதாயத்திற்கு ஆற்றும் சேவை பற்றி ஒரு குறிப்பும் கொடுக்கப்பட்டது.

இத்துடன் புகைப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வின் திட்ட இயக்குனராக புதிய உறுப்பினர் உதயகுமார் மற்றும் திட்டத்தை வழிநடத்திச் சென்ற முன்னாள் தலைவர் திருக்குமரன் அவர்களுக்கும், ஒத்துழைப்பு நல்கிய புதிய உறுப்பினர் பிரபு அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Thursday, November 14, 2019

14 Nov 2019 - 25th year Installation

14 November 2019 25th year installation ceremony
Jc Selvam As president 2020 of JCI Ranipet Powercity