Tuesday, December 31, 2019

31.12.2019 புத்தாண்டை வரவேற்று உறுப்பினர்கள் அனைவருக்கும் கேக் கொடுத்து மகிழ்வித்தல் நிகழ்வு.....

புத்தாண்டை முன்னிட்டு நமது உறுப்பினர்கள் இல்லங்களில் சென்று வாழ்த்துக்கள் கூறி கேக் கொடுத்து இந்நிகழ்வு மிகவும் சிறப்பானதொரு நிகழ்வாக இருந்தது...
மேலும் ஆண்டுச் சந்தா வையும் சில உறுப்பினர்கள் வழங்கியிருந்தார்கள்.
அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்


Monday, December 23, 2019

23.12.2019-மழலையர் பள்ளியில் விதைப்பந்துகள் வழங்குதல்.

இன்று உலக விவசாயிகள்  தினத்தை முன்னிட்டு  ராணிப்பேட்டையில் அமைந்துள்ள (SUNNY BROKE) மழலையர் பள்ளியில் பயிலும் 25க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் விதைப்பந்துகள் வழங்கப்பட்டன.

விதைப்பந்துகள்  மகிமை, அவற்றைப் பயன்படுத்தும் முறைகள் சுற்றுப்புற சூழலின் அவசியத்தையும், விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் இந்நிகழ்வில் குறிப்பாக கொடுக்கப்பட்டது.

முன்னாள் தலைவர் JC திருக்குமரன் ஒருங்கிணைப்பில்
திட்ட இயக்குனராக செயலாளர் ஜேசி தண்டபாணி சிறப்பாக இத்திட்டத்தை செயல்  படுத்தினார்.

தலைவர் JC செல்வம், செயலாளர் JC தண்டபாணி,
JCRT  சுபாஷினி, Jclt ஷிவானி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விதைப்பந்துகள் வழங்கினர்.


23.12.2019-குருதிக்கொடை


நமது கிளை இயக்கத்தின் சார்பாக திருமலை மெஷின் மருத்துவமனையிலும்,
வேலூர் சிவகுமார் மருத்துவமனையிலும் நமது உடனடி முன்னாள் தலைவர் ஜே சி ஏழுமலை மற்றும் உறுப்பினர் ஜேசி பெருமாள் அவர்களின் அழைப்பின் பேரில் இரு நபர்கள் குருதிக்கொடை வழங்கினர்.

குருதி  கொடை வழங்கிய நபர்களுக்கு நமது  கிளை இயக்கத்தின் சார்பாக போக்குவரத்து செலவு மற்றும் இதர செலவுகளை உடனடி முன்னாள் தலைவர் அவர்கள் ஏற்பாடு செய்து கொடுத்தார்..

குருதி கொடை வழங்கிய நபர்களுக்கும், இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் களுக்கும் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.


Sunday, December 22, 2019

22.12.2019 இலவச கண் சிகிச்சை முகாம் லாலாபேட்டை கலைமகள் பள்ளியில்...

நமது கிளை இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஜேசி பாஸ்கரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் லாலாப்பேட்டை கலைமகள் பள்ளியில் நடத்தி தனது பிறந்தநாளை மிக சிறந்த நாளாக செயல்படுத்தினார்.

இக் கண்சிகிச்சை முகாமில் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மூன்று பேருக்கு இலவச கண் அறுவை சிகிச்சைக்கு வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

ஐந்து பேருக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்பட உள்ளது.

10க்கும்  மேற்பட்டோருக்கு இலவச மருந்துகளும் வழங்கப்பட்டன.

மேலும் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு கண் நல ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இவை அனைத்தும் பிறந்தநாள் பரிசாக சேவை நோக்கோடு மக்களுக்கு அளித்து தனது பிறந்தநாளைசிறந்த நாள் ஆக்கினார் முன்னாள் தலைவர் ஜேசி பாஸ்கரன் அவர்கள்.

இந்நிகழ்வு  முன்னாள் தலைவர் ஜேசி திருக்குமரன் முன்னிலையில் தலைவர் ஜேசி செல்வம் ஒருங்கிணைப்பில் , செயலாளர் ஜேசி தண்டபாணி , JC மதுமிதா இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தினார்கள்.
மனித சேவையே மகத்தான சேவை என மனதில் கொண்டு சிறந்த சேவையாற்றிய ஜேசி பாஸ்கரன் அவர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.

Saturday, December 21, 2019

21.12.2019 -முதியோர் இல்லத்தில் உணவு வழங்கும் நிகழ்வு....


நமது கிளை இயக்கத்தின் புதிய உறுப்பினர் JC மதுமிதா அவர்கள் தந்தையின் மூன்றாம் ஆண்டு நினைவு அஞ்சலி முன்னிட்டு மகாத்மா காந்தி முதியோர் இல்லத்தில் ஒரு நாள் உணவு வழங்கினார்.
ஜே சி யில் தன்னை இணைத்துக் கொண்டு மனித சேவையை இலக்காக வைத்து இந் நிகழ்வு இன்று செயல்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வின் திட்ட இயக்குனராக மதுமிதா அவர்கள் செயல்பட்டு குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து அனைவருக்கும் உணவு வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் உடனடி முன்னாள் தலைவர் ஜேசி ஏழுமலை அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து கொடுத்தார்.

தலைவர் 2020 அவர்களால் முதியோர்களுக்கு மன ஆரோக்கிய சிறப்பு உரை ஒன்றும் வழங்கப்பட்டது.


JC கணேஷ் அவர்கள் நிகழ்வில் கலந்துகொண்டு அனைவருக்கும் உணவு பரிமாறி நிகழ்விற்கு உறுதுணையாக இருந்தார்.

ஜேசி மதுமிதா அவர்களின் குடும்பம் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்



Friday, December 20, 2019

20.12.2019 மாணவர்கள் ஊக்குவிப்பு நிகழ்வு


நமது கிளை இயக்கத்தின் உறுப்பினர் ( VP Business 2020) JC ராமச்சந்திரன்  அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு சிப்காட் மணியம் பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியரில் நல்ல மதிப்பெண்கள் மற்றும் நற்பண்புகள்திறமைகள் அடிப்படையில் அவர்கள் ஆசிரியர்கள் துணைகொண்டு சில மாணவ மாணவர்களை தேர்ந்தெடுத்து நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன .

மேலும் அவர்களுக்கு நற்பண்புகள் பற்றிய குறிப்பும் பயிற்சி வகுப்பாக கொடுக்கப்பட்டது.

திட்ட இயக்குனராக ஜேசி பார்த்திபன் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தினார்.

தலைவர் 2020 நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து கொடுத்தார்.

 தனது பிறந்தநாளை சிறந்த நாளாக செயல்படுத்திய ஜேசி ராமச்சந்திரன் அவர்களை பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.




Tuesday, December 17, 2019

17.12.2019 கல்வி உதவித்தொகை



நமது கிளை இயக்கத்தின் சாசன தலைவர் JC PMK அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டும் , புதிய உறுப்பினர் JC சதீஷ்குமார் இம்மாத பிறந்த நாளை முன்னிட்டும் சாதிக்க நினைக்கும் ஒரு மாணவிக்கு கல்வி உதவித்தொகை ராணிப்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வழங்கப்பட்டது. அம்மாணவியின் பெற்றோரால் அத்தொகை பெறப்பட்டது.
 இந்நிகழ்வில் 40க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் தற்காப்பு பற்றிய விழிப்புணர்வும் அவர்களுக்கு பயிற்சி வகுப்பாக அளிக்கப்பட்டது.
 இப் பயிற்சி வகுப்பினை தற்காப்புக் கலை பயிற்றுநர் மற்றும் JCIRPC  தலைவர் 2020
அவர்களால் அளிக்கப்பட்டது.
 இதில் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
 திட்ட இயக்குனராக ஜேசி சதீஷ் குமார் அவர்கள் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தினார்.

 மாணவியின் கல்வி உதவித்தொகையை ஊக்கத்தொகையாக அளித்த JC PMK ,JC சதீஷ்குமார் அவர்களின் அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி கலந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Sunday, December 15, 2019

15.12.2019 JCI orientation programme for JC and Non JC members


JCI orientation programme for JC and Non JC members " was conducted today at JC office.
Trainer  JC.sen.J. Senthil Murugan covered about JCI.
1) Scope for individual development
2) Opportunity to grow and create a positive change
3) Brief on JC Organisation structure
4) 5 Areas of opportunities in JC.

The session was interactive and well received by all Non JC participants and Jc members

Saturday, December 14, 2019

14.12.2019 இலவச கண் சிகிச்சை முகாம்


ரெண்டாடி கிராமத்தில் நமது கிளை இயக்கத்தின் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

பார்வை குறைபாடு உள்ள 120 பேர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
பொன்னை ஆரம்ப சுகாதார நிலைய கண் மருத்துவரும், கிளை இயக்க முன்னாள் தலைவருமான ஜேசி பாஸ்கரன் அவர்களும், மருத்துவ ஊழியர் கனிஷ்கா அவர்களும் கண் பரிசோதனை செய்தனர்.
ரெண்டாடி
கிராம ஊராட்சி மன்ற துவக்கப்பள்ளியில் இந்நிகழ்வு கிராம முன்னாள் தலைவரும் நமது கிளை இயக்க உறுப்பினர் மற்றும் இந்நிகழ்வின் திட்ட இயக்குனருமான ஜேசி பெருமாள் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கண் பரிசோதனை செய்த100 பேருக்கு இலவச கண் கண்ணாடி ஜனவரி 1 இல் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் ஐந்து பேருக்கு கண் அறுவை சிகிச்சை பரிந்துரையும், 20க்கும் மேற்பட்டோருக்கு மருந்துகளும் வழங்கப்பட்டன.

இதில் கலந்து கொண்ட மக்களுக்கு கண் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு குறிப்பும் ஜேசி பாஸ்கரன் அவர்களால் கொடுக்கப்பட்டது.

கிராமத் தலைவர் மூலம் மதிய உணவு கண் சிகிச்சை முகாம் அமைப்பா

இந்நிகழ்வை சிறப்பாக திட்டமிட்டு இரண்டாவது மாதம் முதல் நிகழ்வாக சிறப்பு செய்தமைக்கு

JC பாஸ்கரன், JC பெருமாள், ஜேசி செல்வம் ஆகியோருக்கு நமது கிளை இயக்கத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.


Friday, December 13, 2019

13 Dec 2019 - நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது

வெள்ளி விழா ஆண்டின் ஆட்சி மன்றம் பதவியேற்று முதல் மாத இறுதி நாள் மற்றும் 30 ஆவது நாளை முன்னிட்டு இன்று ராணிப்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது..

நிலவேம்பு கசாயம் பருகுவதனால் ஏற்படும் நன்மைகளைப் பற்றியும், உடல்நலம் பேணல் பற்றியும், நோய் வராமல் காக்கும் முறைகளையும் பயிற்சி வகுப்பாக கொடுக்கப்பட்டது.
இப் பயிற்சியினை மண்டல பயிற்சியாளர் ஜேசி திருக்குமரன் அவர்கள் மூலம் எடுக்கப்பட்டது.

நிகழ்வின் திட்ட இயக்குனராக புதிய உறுப்பினர் JC சதீஷ் குமார் அவர்கள் இத்திட்டத்தை சிறப்பாக நடத்திக் கொடுத்தார்.
இத்திட்டம் சிறப்பாக அமைந்ததற்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி
அன்புடன்
JC விஸ்வநாதன்
VP COMMUNITY 2020
ராணிப்பேட்டை பவர் சிட்டி.

Tuesday, December 10, 2019

10.12.2019 கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு

கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு  பொன்னை  ஆத்ம ஞான சபை அருகே அமைந்துள்ள சித்தர் மலையில் தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு தரிசனம் செய்யப்பட்டது.

இத் தரிசனத்தில் நமது கிளை இயக்க உறுப்பினர்களான
JC பாஸ்கரன்
JC ரமேஷ் பாபு
JC செல்வம்
JC சுபாஷினி
JC சிவானி
ஆகியோர் தங்கள் குடும்பத்தோடு இணைந்து தரிசனம் மேற்கொண்டனர்.

கிளை இயக்கத்தின் சார்பாக PMK அவர்கள் மூலம் நன்கொடையும் வழங்கப்பட்டது.

Monday, December 9, 2019

09.12.2019 சாலையின் நடுவே உள்ள பழுதை தற்காலிக பராமரிப்பு

லாலாபேட்டை யில் அமைந்துள்ள சாலையின் நடுவே உள்ள பழுதை தற்காலிக பராமரிப்பு செய்யப்பட்டது.
இந்நிகழ்வினை Jclt ஷிவானி மற்றும் தற்காப்பு கலை மாணவிகளும் இணைந்து செயல்படுத்தினர்

09.12.2019 தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்பட்டது.

பெல் நரசிங்கபுரம் அரசினர் பள்ளியில் மாணவர்களுக்கு நமது ராணிப்பேட்டை பவர் சிட்டியின் சார்பாக தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்பட்டது.

மேலும் மாணவர்களுக்கு தற்காப்பு பற்றிய விழிப்புணர்வும் பயிற்சி வகுப்பாக கொடுக்கப்பட்டது.
இத்திட்டத்தை கராத்தே பயிற்சியாளரும் வெள்ளி விழா ஆண்டின் தலைவரும் ஏற்பாடு செய்து நடத்திக் கொடுத்தனர்.

Sunday, December 8, 2019

08.12.2019 அன்னையர் தின சிறப்பு

அன்னையர் தின சிறப்பு நாளை முன்னிட்டு நமது ராணிப்பேட்டை பவர் சிட்டியின் சார்பாக 3 அன்னையர்களுக்கு சிறப்பு செய்யும் விதமாக அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

மேலும் அவரவர் பிள்ளைகளுக்கு தங்களின் ஆசி வழங்கியும், நல்ல கருத்துக்களையும் இந்நிகழ்வில் பகிரப்பட்டது.
இந்நிகழ்வில் தற்காப்புக் கலையை சேர்ந்த மாணவ மாணவியர் பங்குபெற்றனர்..

அன்னையர்களின் சிறப்பை மாணவ மாணவியருக்கு பயிற்சி வகுப்பாக கொடுக்கப்பட்டது

இந்நிகழ்வினை ஒருங்கிணைத்து திட்ட இயக்குனராக புதிய உறுப்பினர் சதீஷ் குமார் அவர்கள் திறம்பட செய்தார்.

Saturday, December 7, 2019

07.12.2019 தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்பட்டது.

பெல் நரசிங்கபுரம் அரசினர் பள்ளியில் மாணவர்களுக்கு நமது ராணிப்பேட்டை பவர் சிட்டியின் சார்பாக தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்பட்டது.

மேலும் மாணவர்களுக்கு தற்காப்பு பற்றிய விழிப்புணர்வும் பயிற்சி வகுப்பாக கொடுக்கப்பட்டது.
இத்திட்டத்தை கராத்தே பயிற்சியாளரும் வெள்ளி விழா ஆண்டின் தலைவரும் ஏற்பாடு செய்து நடத்திக் கொடுத்தனர்.

Friday, December 6, 2019

06.12.2019 create awareness and to recognize the National Disability day was conducted today


ID programme to create awareness and to recognize the National Disability day was conducted today 06.12.19 at BHEL Palar club for the benefit of the public .

Topic covered include importance of National Disability day (Dec 3),

A brief also given on inspirational personalities with special abilities and their achievements, pledge to promote gender and general equality ,safe City and safe transport.

Tuesday, December 3, 2019

03.12.2019 உலக மாற்றுத்திறனாளிகள் தினம் அதனை முன்னிட்டும்

உலக மாற்றுத்திறனாளிகள் தினம் அதனை முன்னிட்டும்,
பெல் நரசிங்கபுரம் அரசினர் நடுநிலைப்பள்ளியில் பயின்று கொண்டிருக்கும் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் அவர்களை சிறப்பு செய்யும் விதமாக அவர்களுக்கு எல்லா மாணவ-மாணவிகளும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் தற்காப்புக் பயிற்சியான கராத்தே பயிற்சி  அவர்களுக்கும் நமது பவர் சிட்டியின் சார்பாக அளிக்கப்பட்டது.

அந்தப்  பயிற்சியினை கராத்தே பயிற்சியாளரும் நமது புதிய உறுப்பினருமான ஜேசி பிரபு அவர்கள் மூலம் கொடுக்கப்பட்டது.

பயிற்சியின் முடிவில் மூன்று பேருக்கும்  பரிசுகளும் வழங்கப்பட்டன.

அப்பள்ளியின் தலைமையாசிரியர் முன்னிலையில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வின் திட்ட இயக்குநராகவும், பயிற்சியாளராகவும் சிறப்பு செய்த ஜேசி பிரபு அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.